அணையில் பிடித்த அனை

நேத்து வரி-சைல போட்டிருந்த பாடல் பத்தி் சொந்தம் ஒருத்தர் ஒரு பிழை அனுப்புனாரு.. "அணைத்து நனைந்தது" - அணைத்து-க்கு இரண்டு சுழி 'ன' தான் வரும்னு..

அவர் சொன்ன கருத்து -
அணை : அணைக்கட்டு, நீர்த்தேக்கம்
அனை : கட்டிப்பிடித்தல், அவித்தல்

இதென்னடா இது, நாமளும் எவ்ளோ தமிழ் படிச்சிருக்கோம், எங்கயுமே "அனை" பார்த்ததில்லயே, சரி, பார்த்துட்டா போச்சுனு சென்னைப் பல்கலை தமிழகராதி-ல போய் பார்த்ததுல புதுச்சொல் ஒன்னோட பொருள் புரிந்ததது..

அனை¹ - அந்த, அனை² - மீன்வகை
அணை²-த்தல் - தழுவுதல், கட்டுதல், அவித்தல், கூட்டிமுடித்தல, உண்டாக்குதல்,
அணை³ - அணைக்கட்டு

[சென்னைப் பல்கலைக்கழக தமிழகராதியில் இருந்து..]
[ஆக்கப் பொது உரிமத்தின் கீழ்.. Under Creative Commons License]

அதனால அடுத்த தடவ மேட்டூர் போகும்போது,
அனை(அந்த) அணையில் அனை(மீன்) பிடித்து படகுல அணை(கட்டு)த்திடலாம்.. :-)

அவர் சுட்டிக்காட்டியது பிழையில்லனாலும், அவரால தமிழின் சொற்சுவைய அறிந்திருக்கோமில்ல!!

No comments: