கனவு பாதி நனவு பாதி

[கடவுள் பாதி, மிருகம் பாதி (அ) ரீல் பாதி, ரியல் பாதி - பத்தி தெரியாதவங்க, கூகிள் செய்து பாத்துட்டு படிங்க..]
இடம்:
கல்லூரி, ஆண்டுத் துறையிடை போட்டிகள், கல்லூரி இளையவருங்க நடத்தற போட்டிங்கள பாக்கப் போயிருந்தேன், போட்டிகள் இரண்டாவது நாள், காலை ஏழு மணி, முதல் நாள் அலுப்புல செம தூக்கம்..
பொருள்:
மௌன விளையாட்டு (டம்ப்ஸீ) போட்டி, செல்வி நடத்தப் போகிறார், செல்வி கொஞ்சம் துணிச்சலான இந்த காலத்துப் பெண்.. பாக்கப் போகணும்.. கூட ஒரு மனதளவு ஆதரவும் கொடுக்கப் போகணும்.. ஆனா தூக்கம் விட மாட்டேங்குது!
ஏவல்:
பதினோரு மணிக்கு எழுந்து, பன்னெண்டு மணிக்குப் போறப்ப கேக்க வர செல்விக்கு பதில் சொல்லணுமில்ல!!

காட்சி:
(நண்டு தூங்கறான், மணி அடிச்சி, அடிச்சி களைச்சி செல்பேசி பேட்டரி அவுட்!)
செண்டு: நண்ஜூ, யெய்ந்திரி டா.. ட்சைம் ஆச்சி.. புவர் கேள், அந்தப் பொண்ணு செல்விய யென்னா டார்ச்சர் பண்றாங்களோ! பொறுக்கிப் பசங்க..
வண்டு: டே செண்டு, சும்மார்ரா.. யாரு பாவம்? அந்தப் பொண்ணு வாயத் தொறந்துச்சுனா - எம்மா.., டீம்ஸ்-லாம் அப்பால போயி வுந்துருவாங்க..
செண்டு: ட்ஜேய் வண்டு, அந்தப் பொண்ணு யெவ்ளோ ஸ்மார்ட்-ஆ ரௌண்ட்ஸ்-லாம் செட் பண்ணியிர்கு தெர்ரியுமா, ட்ஜேய் நண்டு, யெய்ந்திரி டா.. யென்க்கு, டம்ப்ஸீ பாக்ணும்னு ஆஷையா யிர்க்குடா..
வண்டு: செண்டெ, மன்சனுக்கு எய்ட் ஹவர்ஸ் தூக்கம் மஸ்ட்-ஆன்டா.. (இப்ப வர்ற படங்களலாம் பாத்தா, எய்ட் டேஸ்-க்கு கண்ணு அவிஞ்சி போயிடுது, இதுல எய்ட் ஹவர்ஸ் எங்க தூங்கறது?!)
செண்டு: ட்ஜேய் வண்ஜூ,தெரியுமாடா - யெட்டு மண்நேரத்துல, நம்ம இளையராஜா சார் யில்ல, ஒரு ஃபுல் படத்துக்கே ம்யூசிக் போட்ருவாரான்டா, ஓ மை காட், ஈ இஸ் சச் எ ட்ரூ ஜீனியஸ் டா!
வண்டு: அப்டீனு பாத்தா, செண்டு.. நம்ம ஊரு மியூசிக் டைரக்டர் ஒருத்தரு, அவரு போட்ற லாலாலா போட, ஒரு படத்துக்கு எய்ட் வீக்ஸ் ஆகுமான்டா.. (எய்ட் வீக்ஸ், என்னா, எய்ட் மன்த்ஸ் போட்டாக் கூட இப்டித்தான் போடுவாரு, எப்பா, அப்றம் அதுக்கு நீதான் டா டேன்ஸ் ஆடணும்,,)
செண்டு: தூ, பொறுக்கிப் பையா, ட்ஜேய் நண்டு, யெயிந்திரிடா, யிரு.. யிரு, யின்னும் கொஞ்ச நேரத்துல, கால் மேல கால் வந்து ஒன் தூக்கத்த கெடுக்கப் போகுது.. அப்றம் நீயே யெந்திரிக்கப் போற..
வண்டு: டே செண்டு, அதான் மொபைல் ஆஃப் ஆயிடுச்சில்ல, எப்பிட்றா கால் பண்ணுவாங்க..? (இப்ப சில டைரக்டருங்க எழுதுற டயலாக்லாம் கேட்டா நம்ம காதே ஆஃப் ஆயிடுது..)
செண்டு: நீ சொல்றது ர்ரொம்ப கர்ரெக்ட் டா நண்டு, ஆனா, மதன் சார் மாதிரி ஆளுங்க யெயிதற டயலாக்லாம் கேட்டா, ஆஃப் ஆயிருக்கற காதே ஆன் ஆயிடும் டா..
நண்டு (கொஞ்சம் தூக்கம் களைஞ்சு): டே செண்டு, என்னாங்கடா, ரீல் பாதி, ரியல் பாதில வர்ற மாதிரி, சும்மா தொணதொணனு பேசிக்குனே இர்க்கீங்க, சும்மார்ருங்கடா, தூங்கணும்.. வண்டு, வாய மூட்றாப்பா, எல்லாத்தையும் கலாய்க்கறான்..
(நண்டு தொடர்ந்து தூங்கறான்..)

தொரட்டிக் கண்ணு கருவாச்சியே!

கொஞ்ச நாள் முன்ன, முழுவரிசை-ல போட்டிருந்த பருத்திவீரன் படப்பாடல்-ல சினேகன் எழுதன ஒரு வரி:
"தொரட்டிக் கண்ணு கருவாச்சியே, நீ தொட்டா அருவா கரும்பாகுதே.. "

இதுல, தொரட்டி/துரட்டி-ங்கற வார்த்தை கேள்வியே பட்டதில்லையே-னு சிந்திச்சா, இடம் பொருள் வச்சி அது அருவா போல ஒரு ஆயுதம்-னு பட்டுச்சு, சரி, மேல ஆராய்வோம்னு, "தமிழ் தெரிஞ்ச" நண்பர் ஒருவர்கிட்ட கேட்டேன்..

நான்: 'தொரட்டிக் கண்ணு கருவாச்சி' - தொரட்டி/துரட்டி - ஆயுதமா இருக்கலாம், என்ன-னு தெரியுமா?

நண்பர்: ஹ்ம்ம்ம்,, நானும் அருவா மாதிரி தான்-னு நெனைக்கறேன்.. தெரியல.. பாத்து சொல்றேன்..

அடுத்த நாள்-
நண்பர்: உண்மையிலேயே அழகானதொரு உவமை.. கண்ணுக்கு..! அந்த ஆயுதம் வேறெதும் இல்லை..
அலக்கு.. tamil lexicon ல பார்த்தேன்..

நான்: அலக்கு-ஆ.. அப்டின்னா?!

: அலக்கு பாத்ததில்லையா.. நீண்ட கம்பு ஒன்றின் நுனியில் கொக்கி (அ) சிறிய கதிர் அரிவாள் மாதிரியான ஒரு உலோக ஆயுதம் இணைக்கப்பட்டிருக்கும்.. கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் பழங்கள் பறிக்க.. கிளைகளை வளைத்து கொடுக்க உபயோகப்படுத்தப்படுவது..
மாட்டி இழுக்கறதுன்னு வைச்சுக்கலாம்.. இப்போ அந்த உவமை புரியுதா..
சுண்டி இழுக்கும் கண்கள் அப்டீன்னு பொருள் படலாம் அந்த உவமை..

நா: அட, நம்ம கொக்கிக்கோல்.. புளி உலுக்குவாங்களே..!

: தெரியல-பா, அலக்கு தான் எங்க பக்கம் சொல்லுவாங்க.. எதுவா இருந்தா என்ன, உவமை தான இங்க பாக்கணும்.. ஆகா.. பிரிச்சிருக்காரு சினேகன்!

நா: அருமை, அருமை, தமிழ் அருமை, தமிழில் கவி அருமை, கவியில் சொல் அருமை!

: அமுதில் விளைந்த கவியல்லவா..

ஆக, இந்த வரிசை, முழுவரிசை மூலம் பாட்டு நெறைய கத்துக்கறனோ இல்லையோ, தமிழ் நல்லா கத்துக்கறேன்!!