ஃபோன் மாடி!

போன வாரம், ரயில்ல வந்தப்ப, நடந்த ஒரு நடப்பு.. நான் வண்டியில ஏறி உக்காந்ததும், எதிர்ல, ஒரு முதியவர, இளைஞன் ஒருத்தன் வந்து உக்கார வச்சு, வழியனுப்ப வந்திருந்தான்.. அவங்க ரெண்டு பேரும், ஆங்கிலமும் தென்னிந்திய மொழி ஒன்னும் [நெறைய ஆங்கிலத்துல, கொஞ்சம் அந்த மொழி] கலந்து பேசிக்கிட்டிருந்தாங்க..

நமக்கு ஒரு கெட்ட பழக்கம்.. கூட இருப்பவங்க, பாக்கறவங்க, மத்தவங்க, எல்லாரோட மொழிய ஊகிக்க பார்ப்பேன். குறிப்பா - ஆட்டோ ஓட்டுனர், வழிப்பயணிகள் - இப்படி.

இவங்க பேசினது இதுதான்-னு குறிப்பா சொல்ல முடியல, அப்பப்ப வார்த்தைகள் வாங்கி, செயல்படுத்திப் பாத்துக்கிட்டிருந்தேன்.. கண்டிப்பா தெலுங்கும், மலையாளமும் இல்ல-ங்கறது உறுதியாயிடுச்சு. தமிழா, கன்னடமா,னு தெரியல.. [தமிழுக்கும் கன்னடத்துக்கும் வேறுபாடு தெரியலயானு கேக்காதீங்க.. அவ்ளோ குறைவா மொழிச்சொற்கள் பேசினாங்க!]

வண்டி கெளம்பற நேரம் வந்துச்சு. ஆகா, தோத்துட்டமானு நெனைக்க, அந்த இளைஞன், விடைவாங்கினு கெளம்பிட்டான். முடிஞ்சது கதைனு பாக்கறதுக்குள்ள, 'ஃபோன் மாடி!' - நடைபாதையிலிருந்து இளைஞன் குரல். 'யுரேகா!' - கன்னடம் முடிவானது..!

இப்படித்தான்-ங்க, மாடி, ச்செய்யண்டி, பண்ணு, கரோ - இத வச்சே மொழிய ஊகிக்க வேண்டிய நிலமை வந்துடுச்சு.. எல்லாரும் ஆங்கிலம் கலக்காம, அவங்கவங்க மொழியில ஒழுங்கா பேச ஆரம்பிச்சுட்டா, நம்ம பாடு திண்டாட்டம் தான்! ;]

No comments: